சீன வர்த்தக கப்பலில் பணியாற்றும் இலங்கை மாலுமிகள் அறுவருக்கு காய்ச்சல்

by Staff Writer 27-01-2020 | 4:24 PM
Colombo (News 1st) சீனாவிலிருந்து எகிப்து நோக்கி பயணிக்கும் வர்த்தகக் கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் வர்த்தகக் கப்பல் சங்கத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். C.M.A.C.G.M. வுரல் எனும் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களே காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பாலித்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.