by Staff Writer 26-01-2020 | 12:39 PM
Colombo (News 1st) மலையக மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நானுஓயா மற்றும் அம்பேவல பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.
கண்டியிலிருந்து பதுளைக்கு பயணித்த ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.