நாளை முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

நாளை முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

by Staff Writer 26-01-2020 | 7:46 AM
Colombo (News 1st) பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் நாளை (27) ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் நிர்ணய விலையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முதலில் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல் 50 ரூபாவிற்கும் ஒரு கிலோகிராம் ஈரலிப்பான நெல் 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.