சட்டவிரோத உபகரணங்களால் மீன்பிடித்த இருவர் கைது

சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

by Staff Writer 26-01-2020 | 9:50 AM
Colombo (News 1st) சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் காலி - ருமஸ்ஸல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பியர் கன் எனப்படும் உபகரணத்தை பயன்படுத்தி தம்பதியினர் மீன் பிடித்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.