ஐதேமு பிரதிநிதிகள் - சஜித் இடையே சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் - சஜித் பிரேமதாச இடையே சந்திப்பு

by Staff Writer 26-01-2020 | 8:04 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளதுடன், ஏனையோரின் கருத்துக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்படவுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளார்.