English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Jan, 2020 | 8:04 am
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளதுடன், ஏனையோரின் கருத்துக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளார்.
17 May, 2022 | 06:43 PM
13 May, 2022 | 10:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS