பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்

by Staff Writer 25-01-2020 | 6:17 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தார். சுமார் 3 மணித்தியாலங்கள் அவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். இதேவேளை, மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகளை சேதமாக்கியமை மற்றும் வண்ணாத்திவில்லில் ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பிலும் அவரிடம் சாட்சியம் பெறப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று மாவனெல்ல கிராம சேவகர் ஒருவரும் பொதுமக்கள் இருவரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதுடன், அவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்