நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

by Staff Writer 25-01-2020 | 6:10 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை சாதாரண மட்டத்தைக் காட்டிலும் 1 மற்றும் 4 பாகை செல்சியஸிற்கு இடையில் அதிகரித்துள்ளது. இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 34.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை கட்டுநாயக்கவில் அதிகூடிய அளவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்கவில் சாதாரண மட்டத்தைக் காட்டிலும் 3 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலி மாவட்டத்தில் வெப்பநிலை சாதாரண மட்டத்தைக் காட்டிலும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, இரத்மலானை மற்றும் புத்தளத்தில் வெப்பநிலை சாதாரண மட்டத்தைக் காட்டிலும் 3 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.