மனைவியைக் கொன்றவர் தற்கொலைக்கு முயற்சி

கிளிநொச்சியில் மனைவியைக் கொன்றவர் தற்கொலைக்கு முயற்சி

by Staff Writer 25-01-2020 | 4:28 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - மயில்வாகனபுரம் பகுதியில் தனது மனைவியை ஒருவர் கொலை செய்துள்ளார். இன்று அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கத்தியால் குத்தி குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார். மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான சுகந்தன் சகுந்தலா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். தாக்குதலை மேற்கொண்ட 26 வயதான சந்தேகநபர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளதுடன், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.