காணாமற்போனோருக்கு விசாரணையின் பின்னரே மரணசான்றிதழ்

காணாமல் போனோருக்கு உரிய விசாரணையின் பின்னரே மரண சான்றிதழ் வழங்கப்படும்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு

by Staff Writer 25-01-2020 | 7:32 PM
Colombo (News 1st) யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணையின் பின்னரே மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயம் தொடர்பில் அண்மையில் முன்வைத்த விடயங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் தௌிவுபடுத்தி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. யுத்தத்தின் போது காணாமற்போன 20,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி அவ்வாறான எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிடவில்லையெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் மரண சான்றிதழ் வழங்குதல், அவர்களின் குடும்பத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவிகளை உரிய விசாரணைகளின் பின்னரே வழங்குவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.