by Staff Writer 24-01-2020 | 4:06 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான ரனாலே சுதுவா கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான உருஜுவா என்பவரின் உறவினரே ரனாலே சுதுவா என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொழிற்சாலைகளிலும் அங்கு நாள் சம்பளத்திற்கு தொழில்புரிவோரிடமும் ரனாலே சுதுவா கப்பம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரனாலே சுதுவாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.