ஷானி அபேசேகரவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 23-01-2020 | 5:37 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சுவிஸ் தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய ஷானி அபேசேகர, வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வௌியேறினார்.