கெரவலப்பிட்டியவில் இயற்கை வாயு நிலையத்தை நிர்மாணிக்க உத்தேசம்

by Staff Writer 23-01-2020 | 9:39 PM
Colombo (News 1st) உத்தேச மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளின் தாமதத்தால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மின் நெருக்கடியை தடுப்பதற்கான சில துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நேற்று (22) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 600 மெகாவாட் கொள்ளவைக் கொண்ட பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு நேற்றுக்கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியா அல்லது ஐப்பானுடன் கூட்டு வர்த்தகமாக 300 மெகாவாட் கொள்ளவைக் கொண்ட இயற்கை வாயு எனப்படும் LNG நிலையமொன்றை கெரவலப்பிட்டியவில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் கெரவலப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச 300 மெகாவாட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக இந்திய அரசாங்கம் வழங்க இணங்கியுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் ஊடாக குறித்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.