English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2020 | 5:09 pm
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ரிப்கான் பதியுதீன் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தலைமன்னார் பகுதியிலுள்ள காணியொன்றை போலி ஆவணங்கள் தயாரித்து ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான ரிப்கான் பதியுதீனை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
எந்தவொரு நிபந்தனைகளுடனாவது தமது சேவை பெறுநருக்கு பிணை வழங்குமாறு ரிப்கான் பதியுதீன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மன்றில் கோரிக்கை விடுத்தார்.
எனினும், சந்தேகநபரைக் கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, கடந்த 09 ஆம் திகதி சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்து அவர் தலைமறைவாகியிருந்ததாகவும் கையடக்கத்தொலைபேசி இணைப்பை துண்டித்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்தனர்.
இதன் காரணமாக சந்தேகநபருக்கு பிணை வழங்கும் பட்சத்தில், விசாரணைக்கு பாதகம் ஏற்படக்கூடும் என்பதாலும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதாலும் பிணை கோரிக்கையை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.
20 Jul, 2022 | 05:50 PM
07 Jun, 2022 | 05:26 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS