by Staff Writer 22-01-2020 | 12:13 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றை, பாலாவி பகுதியில் சோதனைக்குட்படுத்தியபோது மிக சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.