தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது உசிதமானது - சபாநாயகர்

by Staff Writer 21-01-2020 | 1:35 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் கணக்கறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பது உசிதமானது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வின்போது சபாநாயகரால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், முறிகள் மோசடி தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடயவியல் கணக்கறிக்கையைத் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்