மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

by Staff Writer 21-01-2020 | 9:21 PM
Colombo (News 1st)  ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதியின் அனுமதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பில் அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் தனது சிபாரிசை முன்வைத்திருந்தது. அந்த சிபாரிசிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது அனுமதியை வழங்கியுள்ளமையினால் கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது.