by Staff Writer 21-01-2020 | 8:54 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றுவதற்கு முயன்ற போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எனினும், மாலை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்ட ஏற்பாடுகள் மீதான விவாதத்தின்போது ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கோரிய ரஞ்சன் ராமநாயக்க, அவர்களின் குரல் பதிவுகளை தான் வேண்டுமென்றே பகிரங்கப்படுத்தவில்லை எனவும் அச்செயற்பாட்டை குடு தொலைக்காட்சியே முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மறைக்கும் உரையாடல்களும் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அலோசியஸ் தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகளும் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குரல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
காணொளியில் காண்க...