தம்மிக ஹேமபால குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவில் ஆஜர்

by Staff Writer 21-01-2020 | 3:44 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடலால் பணி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் தம்மிக ஹேமபால, கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க, கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவில் நேற்று (20) மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு , நேற்று முன்தினம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசார​ணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. சட்ட மா அதிபரால் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.