ட்ரம்பை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

குற்றச்சாட்டுகளிலிருந்து ட்ரம்பை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

by Staff Writer 21-01-2020 | 12:54 PM
Colombo (News 1st) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் குழு, செனட் சபையை கோரியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களால் அமெரிக்க அரசியலமைப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் மோசடி செய்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து எதிர்த்தரப்பினர் செனட் சபையில் அறிக்கையிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றப்பிரேரணை இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.