கெஹலிய றம்புக்வெல்ல, ஜயந்த ஶ்ரீ பண்டார விடுதலை

கெஹலிய றம்புக்வெல்ல, ஜயந்த ஶ்ரீ பண்டார ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை

by Staff Writer 20-01-2020 | 4:47 PM
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டிருந்த வழக்கொன்றில் இருந்து அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த ஶ்ரீ பண்டார ஹீன்கெந்த உள்ளிட்டோர் இன்று (20) விடுவிக்கப்பட்டுள்ளனர். அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 2,30,000 ரூபா நிதியை கெஹலிய றம்புக்வெல்லவின் பிரத்தியேக தொலைபேசி கட்டணத்தை செலுத்துவதற்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த குற்றச்சாட்டில் இருந்து மேல் நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளமையினால் சந்தேகநபர்களான கெஹலிய றம்புக்வெல்ல மற்றும் ஜயந்த ஶ்ரீ பண்டார ஹீன்கெந்த உள்ளிட்டோரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.