​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்

குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள் குழு அறிக்கை

by Staff Writer 19-01-2020 | 9:11 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணிகள் குழு, அவருக்கெதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்களானது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் ஜனாதிபதியினால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் எந்தவொரு குற்றத்தையும் நிரூபிக்க முடியாது என்பதையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தாக்கத்தை செலுத்தும் நோக்கில் குற்றப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.