by Staff Writer 19-01-2020 | 7:33 AM
Colombo (News 1st) கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபரணை மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையுடன் அப்பகுதி மக்களுடன் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.