by Staff Writer 18-01-2020 | 4:23 PM
Colombo (News 1st) மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் விபச்சார விடுதியொன்றிலிருந்து 52 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபச்சார விடுதியை முகாமை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 முதல் 40 வயது வரையான பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சுற்றிவளைப்பில் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க 32 மசாஜ் நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட 18 மசாஜ் நிலையங்கள் அடையாளங்காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.