வெதசிங்கவின் கீழ் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவு

பதில் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு

by Staff Writer 18-01-2020 | 4:54 PM
Colombo (News 1st)  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் மொனராகலை பிராந்தியம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், உயர் பொலிஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.