மேல்நீதிமன்ற நீதிபதியாக கோதாகொட:ஜனாதிபதி பரிந்துரை

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி பரிந்துரை

by Staff Writer 17-01-2020 | 4:24 PM
Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மேல்நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானார்.