மைத்துனரைக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறை

மைத்துனரை கோடரியால் தாக்கிக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 17-01-2020 | 3:40 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் 2016 ஆம் ஆண்டில் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 2016 ஜனவரி 21 ஆம் திகதி தமது மைத்துனரை கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இந்நபர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.