சீதை அம்மன் கோவிலை புனரமைக்க இந்தியா நிதி உதவி

நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் கோவிலை புனரமைக்க இந்திய மத்திய பிரதேச அரசு நிதி உதவி

by Staff Writer 17-01-2020 | 7:30 PM
Colombo (News 1st) நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்திய மத்திய பிரதேச அரசு நிதி உதவி வழங்கவுள்ளதாக தினத்தந்தி செய்தி வௌியிட்டுள்ளது. நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசு 5 கோடி இந்திய ரூபா வழங்கவுள்ளது. இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்ததாக தினத்தந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டதாக சர்மா இதன்போது தெரிவித்துள்ளார். ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அவர் இதன்போது கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.