ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தம்

ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது

by Staff Writer 17-01-2020 | 5:49 PM
Colombo (News 1st) ட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ட்ரோன் கெமராக்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறத்தேவையில்லை. எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்த முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசூரிய தெரிவித்தார். எனவே, ட்ரோன் கெமராக்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை எனினும், சிவில் விமான சேவை அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமானதாகும்.