பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு

பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

by Staff Writer 17-01-2020 | 3:31 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நேற்று (16) இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஏனைய செய்திகள்