செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

by Staff Writer 16-01-2020 | 4:43 PM
Colombo (News 1st) 2018 - 2019 பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. இழப்பீடுகளை வழங்குவதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6 வகையான பயிர்களுக்காக இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அம்பாறை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இழப்பீட்டுத் தொகை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் விவசாய காப்புறுதி சபையின் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.