அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

by Staff Writer 16-01-2020 | 3:48 PM
Colombo (News 1st) புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கு பின்னரான புதிய கட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளன. தேர்தல் காலப்பகுதியில் கட்சிகளை பதிவு செய்வது சட்டவிரோதமானது என்பதால், கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆகும். இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.