by Staff Writer 16-01-2020 | 4:05 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை மறுதினம் (18) காலை 9 மணி முதல் 22 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதேபோன்று மகரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால், முன்கூட்டியே நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களிடம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.