by Staff Writer 16-01-2020 | 4:10 PM
Colombo (News 1st) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் சில நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்த நிலையில், தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கம் ஊடாக நிர்மாணிக்கப்படும் ரயில் பாலத்திற்கு அருகில் இன்று சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.