மிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தற்கொலை

மிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

by Staff Writer 15-01-2020 | 4:27 PM
Colombo (News 1st) மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.