தேசிய கல்வியற்கல்லூரிகளை தரமுயர்த்த தீர்மானம்

தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்த கல்வி அமைச்சு தீர்மானம்

by Staff Writer 15-01-2020 | 4:32 PM
Colombo (News 1st) - தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்துவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த குறிப்பிட்டார். குறித்த குழு 19 தேசிய கல்வியற்கல்லூரிகளினதும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறித்த கல்லூரிகளின் மனித வளங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கல்வியற்கல்லூரிகள் பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்