வரக்காபொலயில் துப்பாக்கிச் சூடு; யுவதி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 14-01-2020 | 10:05 AM
Colombo (News 1st) வரகாபொல - கனேகம, தொரவக்க பகுதியில் வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் தாயும் இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (14) அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன் பின்னர் யுவதி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.