விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று

லயன் எயார் விமானத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று

by Staff Writer 14-01-2020 | 7:48 AM
Colombo (News 1st) திடீரென நாட்டில் தரையிறக்கப்பட்ட லயன் எயார் (Lion Air) விமானத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (14) முன்னெடுக்கப்படவுள்ளன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பிரேத பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நாட்டிற்கு வருகை தந்ததன் பின்னரே, சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகம் அறுவித்துள்ளது. உயிரிழந்த இருவரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.