புத்தளம் இறால்மடு குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

by Staff Writer 14-01-2020 | 8:59 PM
Colombo (News 1st) புத்தளம் - வண்ணாத்திவில்லு, இறால்மடு குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 4.30 அளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வண்ணாத்திவில்லு - இறால்மடு குளத்தில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, 36 வயதான வி.சந்திரகுமாரி, அவரது 17 வயது மகன் ஆர்.கிருஷ்ணகுமார், 19 வயதான மகள் ஆர்.சுபாஷினி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று மாலை மீட்கப்பட்ட சடலங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர். கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து தோட்டமொன்றை பராமரிப்பதற்காக சென்றிருந்த குடும்பத்தினரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.