கைதான 61 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்பு: கைதான 61 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 14-01-2020 | 3:52 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டதாகக் கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் 61 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து பரிந்துரை கிடைக்காமையால், சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பில் இருந்து வௌி மாவட்ட சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏனைய செய்திகள்