கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக A.போதரகம

கலால்வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமனம்

by Staff Writer 13-01-2020 | 3:33 PM
Colombo (News 1st) கலால்வரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, புதிய ஆணையாளர் நாயகம் நாளைய தினம் கடமைகளை பொறுப்பபேற்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். A.போதரகம கடந்த 34 வருடங்களாக கலால்வரித் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றார். அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கொழும்பு, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் A.போதரகம கடமையாற்றியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டில் பதில் கலால்வரி ஆணையாளர் நாயகமாக பதவி வகித்துள்ளார். 23 வருடங்களின் பின்னர், கலால்வரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்