வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 12-01-2020 | 9:13 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (13) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. களனி கங்கையின் கரையோர செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. அதற்கமைய பேலியகொட, வத்தளை, மாபோல, களனி, ஹெந்தலை, எலகந்த, பள்ளியாவத்தை, பியகம, கோணவல, பமுனுவில உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்