by Staff Writer 12-01-2020 | 7:28 AM
Colombo (News 1st) தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பல வருடங்களாக குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்பட்டதாக அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்பிரகாரம் தகுதிவாய்ந்தோருக்கு நாளைய தினம் (13) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.