திருகோணமலையில் பெரும்போக விளைச்சல் வீழ்ச்சி

திருகோணமலையில் பெரும்போக விளைச்சல் வீழ்ச்சி

by Staff Writer 11-01-2020 | 8:44 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் பெரும்போக விளைச்சல் கணிசமானளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் மழை, வெள்ளத்தினால் எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காது, மிகக் குறைந்தளவு விளைச்சலே கிடைத்துள்ளதாக திருகோணமலை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெரும்போக விளைச்சல் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், நெல்லுக்கான விலை அதிகரித்துக் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஒரு மூடை நெல்லின் விலை 2900 தொடக்கம் 3000 ரூபா வரை மொத்த வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.