by Staff Writer 10-01-2020 | 7:14 PM
Colombo (News 1st) கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்தமையக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது 19 வயதில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகயீனம் காரணமாக கடந்த மாதம் இறுதியில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்தும் சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.