உள்நாட்டு விமான எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது

உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 10-01-2020 | 4:31 PM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு வரி சலுகைகள் மற்றும் எரிபொருள் சலுகைகளும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.