உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்து

உக்ரைன் விமானம் விபத்து ; பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

by Staff Writer 08-01-2020 | 10:22 AM
Colombo (News 1st) உக்ரைன் விமான சேவைக்கு சொந்தமான போயிங் - 737 ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. இதனையடுத்து, விமானம் வீழ்ந்த இடத்திற்கு மீட்புப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. எனினும், எவரையும் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு இல்லை என ஈரானின் செஞ்சிலுவை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 170 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய விமானத்தின் எஞ்சின் செயலிழந்தமையே விபத்திற்கான காரணம் எனவும் பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் தெஹ்ரானிலுள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.