பெரும்போக நெல் கொள்வனவு

பெரும்போக நெல் கொள்வனவு

by Staff Writer 08-01-2020 | 8:08 AM
Colombo (News 1st) பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை தயாராகியுள்ளது. இதற்காக, சபைக்கு உட்பட்ட அனைத்து கிளைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் G.D. மானப்பெரும தெரிவித்துள்ளார். அரச கொள்கைக்கு அமைவாக பெரும்போகத்தில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து உரிய நேரத்தில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு சபை எதிர்பார்த்துள்ளது. நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் சுமார் 3 மெற்றிக் தொன் நெல் கையிருப்பிலுள்ளதுடன், ஏனையவை விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.