ஜனாதிபதி ஆணைக்குழுவில் அசாத் சாலி ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அசாத் சாலி ஆஜர்

by Staff Writer 08-01-2020 | 12:14 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அவர் முன்னிலையாகியுள்ளார். இன்று (08) காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவிற்கு சென்ற மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் அக்மீமன தயாரத்ன தேரரும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 47 பேர் சாட்சி வழங்கியுள்ளனர். மேலும், 317 பேர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.