by Staff Writer 08-01-2020 | 8:29 AM
Colombo (News 1st) கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், கஹவ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமையால் கரையோர மார்க்கத்தில் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ள ரயிலின் திருத்தப் பணிகளுக்கு குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.